Friday, November 6, 2015

விண்டவர் கண்டதில்லை சொல்லார் சொல்லார்...

வணக்கம் தோழர்களே, மாணவர்களே..

சித்தர் இலக்கியம் என்பது மிக ஆழமானது, அதை புரிந்து கொள்வது அதைவிட கடினமானது. சித்தர்கள் என்று நாம் கருதும் அகத்தியர் முதல் போகர் வரை தங்களை பதிணென் சித்தர்கள் பட்டியலுள் சேர்க்கவில்லை, அதற்கான சான்றுகள் முன்னமே இங்கு காட்டப்பட்டிருக்கிறது.

சித்தர் பாரம்பரியம் என்பது குரு முறை வம்சமாக வருவது, அதில் பல இரகசியங்கள் செவி மூலமாகவும் பல பாடல்கள் மூலமாகவும் கொடுக்கப்பட்டிருக்கிறது. சித்தர்கள் உண்மையை மட்டுமே சொன்னார்கள் என்று சிந்தித்தால் அது மிக தவறான பாதைக்கு தான் உங்களை வழி நடத்தும்.

பாடல்கள் பரிபாசையாக இருப்பதன் காரனம் அது தான்.

சமீபகாலமாக முகநூலிள் இந்த பதிவு சுற்றி திரிகிறது, அதாவது பலராமையா என்பவர் எழுதிய நூல் ஒன்றின் பிரதியை போட்டு அதில் அவர் குறிப்பிட்டிருப்பதையும் போட்டு இந்த பதிவுகள் வலம் வருகிறது.

அதாவது முப்பு என்பது தொடர்பாக பலராமையா கூறியதும் அது தொடர்பாக அகத்தியர் கூறியதும் என்று அதில் பதிவாகி உள்ளது.

முப்பை கண்டவன் பேசமாட்டான் என்று அதன் சாரம் இருக்கிறது..

சிந்தனைக்கு தெளிவு வேண்டும் இல்லையேல் இப்படித்தான் இதன் புரிதல் தவறாக இருக்கும்.

விண்டதில்லை கண்டவர்கள் சொல்லார் சொல்லார் என்கிறார் அகத்தியர்.. அப்படியானால் அத்தனை ஆயிரம் நூல்களை அகத்தியர் செய்திருக்கிறார் அவற்றில் முப்புவை இப்படித்தான் முடிக்க வேண்டும் என்று முப்புக்கு குரு நூல் எழுதியிருக்கிறார் அகத்தியர்..

விண்டதில்லை கண்டவர்கள் என்றால் அகத்தியர் ஏன் இத்தனை நூல்களை முப்பு பற்றி எழுதினார்..! ஏன் இன்று நீங்கள் சித்தர்கள் என்று பட்டியலிடும் பலரும் முப்புக்கு குரு செய்திருக்கிறார்கள் தானே...!

விண்டவர்கள் கண்டதில்லை.... சொல்லார் சொல்லார் என்றால் இந்த முப்பு தொடர்பாக சித்தர்கள் செய்த நூல்கள் அனைத்தும் பொய்யானவை என்று அல்லவா அர்த்தம் வருகிறது..

அவர்கள் முப்புவை கண்டிருந்தால் சொல்லார்கள்... காணவில்லை சொன்னார்கள்.. ஆகவே அவகள் சொன்னது பொய்யானது என்று தானே எடுக்கவேண்டும்.

பலராமையா ஏன் பொய் என்று தெரிந்து அவர் காலத்தை வீணடித்தார் என்று தான் சிந்திக்க வேண்டியிருக்கிறது..!
அது மட்டும் அல்லாம இவர் ஏன் பொய்யானவைகளை பற்றி நூல் செய்தார்.. !

அகத்தியருக்கு முப்பு தெரியாது என்று அகத்தியரே சொல்கிறார்... அது தானே பலராமையாவில் எழுத்தின் விளக்கம்.. விண்டவர்கள் கண்டதில்லை சொல்லார் சொல்லார்..

பாடல்கள் பரிபாசையை அவர் புரிந்து கொண்டது அவ்வளவுதான் அதனால் தான் அவரால் முப்புவை முடிக்க முடியாது போனது போல்..!

காரணம் முப்பு என்பது முடிப்பதல்ல.., முடிந்தே கிடப்பது, ஆனால் முடிக்க வேண்டுவது, முடித்தால் முடியாதது..!

இங்கு குருவுக்கும் முப்புக்கும் இருக்கும் வேறு பாடுகள் கூட தெளிவாக புரியாமல் பல ஆசிரியர்கள் செய்த நூல்கள் இந்த நிலைக்கு காரணம்..

உலகுக்கு சொல்வது என்பது வேறு மாணவனுக்கு சொல்வது என்பது வேறு.. ஒருவருக்கும் சொல்லார்கள் என்றால் அகத்தியருக்கு சொன்னது யார்..! உங்கள் பலராமையாவுக்கு சொன்னது யார்..! சொல்லவில்லை என்றால் அந்த அறிவு எங்கிருந்து வந்தது பலராமையாவுக்கு..!

சாரி கட்டுவது எப்படி என்று இன்று பல பெண்களுக்கு தெரியாது ஆனால் அதை வைத்து சாரி கட்டமுடியாது என்று எப்படி கூறுவது..! இப்படி மட்டுமே சாரி கட்ட வேண்டும் என்றும் கூற முடியாது அல்லவா..! சிந்திக்க வேண்டும்.,,

ஒருவர் செய்த ஆய்வுகள் மட்டுமே உண்மையை கூறுவதாக இருக்காது என்பதை நினைவில் வையுங்கள்..

பலராமையா இப்போது இல்லை, இருந்திருந்தால் அவருக்கு இதை கடிதமாகவே எழுதியிருக்கலாம், ஆனால் அவரின் பெயரில் பற்றுதல் இல்லாமலும் இல்லை.. அவர் ஓர் சிறந்த ஆய்வாளர் நல்ல மனிதர், மருத்துவர்... அதற்காக அவரின் ஆய்வுகள் மட்டுமே உண்மையானது என்று கூறவும் முடியாது அல்லவா..

இன்று நாம் பல மாணவர்களுக்கு கற்பிக்கின்றோம், அதில் எமது வழிமுறைகள் இருக்கிறது நாளை அவர்கள் தங்களுக்கான ஆய்வுகள் செய்யும் போது எமது ஆய்வுகளில் இருக்கும் தவறுகளை கண்டறிந்தால் அது அவர்களின் சிறப்பான ஆய்வுகளை வெளிப்படுத்தும்..

இது ஓர் தொடர்கதையாக இருப்பது காரணம் இலக்கியம் என்றால் அது தானே... !

சித்தர்கள் கூறியதாக கிடைக்கும் நூல்கள் உலகுக்கு என்று சில, மாணவர்களுக்கு என்று பல, இதில் இருக்கும் வேறுபாடுகளை முதலிள் தெரிய வேண்டும்.

தனித்துவமாக மாணவர்களுக்கு கூறியவைகள் இன்று நம் கைகளில் இருக்கும் போது அதன் செவி மூலமாக கொடுக்கப்பட்ட அறிவு என்ன என்று தெரியாது அல்லவா.. ஆகவே தெளிவான பார்வை சித்தர் இலக்கியதில் இருக்க வேண்டும்.

கடவுள் வேறு கடவுள் நம்பிக்கை வேறு என்ற பரிணாமத்தை வைத்துக் கொண்டு சித்தர்களின் ஆய்வுகள் பார்க்க வேண்டும். அதைவிடுத்து ஆன்மீகம் என்ற மாயைக்குல் சித்தர்களை வைத்துக்கொண்டு அவர்கள் கூறியவை பற்றி பேசினால் பலராமையா அல்ல, வேறு எவறாலும் முப்பை ஆய்வு செய்து வெற்றிகான முடியாது..

தங்கம் செய்வது இரசவாதம் இல்லை என்றும், இரசவாத என்றால் இது தான் என்றும் எமது இரசவாத மாணவர்களுக்கு மிக தெளிவாக தெரியும்.., குரு முடிப்பது வேறு, முப்பு என்பது வேறு.., முப்பு குரு என்பது வேறு.. இதற்கிடையில் இருக்கும் வேறுபாடுகளை தெளிவாக முதலிள் ஆய்வு செய்யுங்கள்..

“ அறியாத வாதிகள்தான் சாத்திரத்தை
ஆராயா மற்றானும் கேட்டுசுட்டு
பிறிவாக நான்கெட்டேன் என்பார்கோடி
பிரட்டுத்தான் சாத்திரமும் என்பார்கோடி
நெறியாக பூசிப்பார் கோடிபேர்கள்
நிர்மூட தனம்செய்வார் கோடிபேர்கள்
*** அறிவாலே அறிந்தாக் காலிந்தநூலை
அடைவாகவே தேனும் கிடைக்கும்பாரு”

பார்க்கிற பார்வை தெளிவானதாக இருக்க வேண்டும், மாயையை நீக்கி பார்த்தால் எல்லாம் புரியும்.

முப்பை பற்றி முன்னரே பல விளக்கங்கள் நாம் எழுதியிருக்கிறோம், அவை எமது ஆய்வுகளின் படி...

உங்கள் ஆய்வுகள் உங்களை மேன்மைப்படுத்தும், இருக்கிறதா இல்லையா என்று மற்றவர் சொவதை விடுத்து நீங்கள் தேடுங்கள். எப்ப பார்த்தாலும் சாமியார் சொல்வது தான், குறி சொன்னா சரியாத்தான் இருக்கும், தாடியுடன் காவிகட்டியவன் சொன்னா உண்மைதான் போன்ற மூடத்தனத்தை விட்டு உங்கள் அறிவை வைத்து சிந்தியுங்கள்..

” பலிக்குமே அறிவுடையோன் செய்துகொள்ளும் பாங்கான வேதைமுகங் கோடாகோடி
ஜொலிக்குமே பிரணவத்தால் மூலிகட்டும் சோராமல் சரக்கெல்லாம் சுருண்டுமாளும்
ஒலிக்குமே லோகமெலாம் ஒன்றாய்க்கூடி வுத்தமனே வாதத்துக் குறுதியாச்சு
சலியாத சரக்கெல்லாம் ஐந்தைந்தாக சட்டமுடன் செய்வார்க்கு வாதமாமே”

” வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு
வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர்
வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர்
கோய்திற வாவிடிற் கோழையுமாமே”

சிந்தியுங்கள்..

தென்னாடுடைய சிவனே போற்றி..

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர் இரசவாத ஆய்வளர்

Monday, April 20, 2015

மாணவர்கள் கற்கிறார்கள்..

வணக்கம் தோழர்களே மாணவர்களே..,

எமது சித்த மருத்துவ கற்பித்தல் இனிதே நடைபெருகிறது., மாணவர்கள் ஆர்வத்துடன் கற்கின்றனர். முதல் கட்ட பாடநெறி முடிவடைந்த நிலையில் இருக்கிறார்கள்..சுமார் மூன்று மாதகாலம் கொண்ட பாடநெறியானது (கல்லூரிகளில்) எமது மாணவர்களின் புரிதல் வேகமாக இருப்பதாலும் குறிப்பிட்ட அளவு மாணவர்கள் மட்டும் சேர்ந்துள்ளதாலும் விரைவாக முடிவடைந்திருக்கிறது., எழுத்து மூலமான விடயங்கள் அதன் விளக்கங்கள் தெளிவடைய கூறப்பட்டிருக்கிறது. அதனை முறையாக மாணவர்கள் அறிவில் சேர்த்துவிட்டால் சித்த மருத்துவம் மட்டும் அல்ல, ஏனைய மருத்துவ முறைமைகளையும் இலகுவாக புரிந்துகொள்ளலாம்.

அவர்களுக்கு செயற்த்திட்ட வேலைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது, குழிக்கல் வாங்குதல், அதை சுத்தி செய்யுதல், திரிகடுகு திரிபலாதி குளிகை செய்தல் அதற்காக அவற்றை பொதுவியல் முறையில் சுத்தி செய்தல், காடி நீர் தயாரித்தல் போன்றவைகள் முதல் கட்ட பாடநெறியில் சேர்க்கப்பட்டு கற்பிக்கப்பட்டிருக்கிறது.,

மருத்துவங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் மற்றும் சித்த மருத்துவமே இன்றைய அனைத்து மருத்துவ முறைக்கும் ஆதாரமானது என்பதற்கான சான்றுகள், மற்றும் சித்த மருத்துவம் என்பது 10000 வருடம் பழமையானது அல்ல அது 10000 வருடம் முன்னோக்கி இருக்கும் நவீன உயர் விஞ்ஞான மருத்துவம் என்பதற்கான ஆய்வுகள், சான்றுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது., சித்தர்கள் என்ற பேரில் இருக்கும் வேறுபாடுகள் மற்றும் அதன் உண்மை நிலை என்பன ஆய்வுகள் மூலம் எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது.

இவை மிக தெளிவாக கற்றிரிக்கிறார்கள் எமது மருத்துவ மாணவர்கள் என நினைக்கிறேன்., அவர்கள் கருத்துக்களை எந்த தயக்கமும் இன்றி இங்கு பதிவார்கள் என நினைக்கிறேன்.

பாடநெறியின் காலத்தை நாம் கருத்தில் எடுப்பதில்லை என்ற நிலையில் இருக்கிறோம், காரணம் இன்று இங்கு கற்பவர்கள் கல்லூரி மாணவர்கள் அல்ல, தினசரி வாழ்விற்கான ஓட்டத்தில் இருக்கும் மனிதர்கள், அவர்கள் விரைவாக கற்றால் தான் அவர்கள் தங்கள் நிலையை உயர்த்த முடியும் என்ற நிலை இருப்பதால் வேகமாகவும் முடிந்தவரை தெளிவாகமும் இந்த கற்றல் தொடரும்.

மாணவர்கள் தனியாக இயங்காமல் உங்களுக்குள் ஓர் ஒற்றுமையை ஏற்படுத்தி நேரத்தை சற்று இதற்காக செலவு செய்தால் நீங்கள் மிக வேகமாக எம்முடம் சேர்ந்து பயனிக்க முடியும்.

குறிப்பு., சில மாணவர்கள் வகுப்புக்களை தவறவிட்டிருந்தால், அதை மற்ற மாணவர்களிடம் கேட்டு தெளிவடையுங்கள்., அப்படியே இனி வரும் வகுப்புக்களுக்கு தவறாமல் வாருங்கள்.
நீங்கள் எப்போது வருவீர்கள் என்று நாம் காத்திருக்க முடியாது, தனித்தனியே உங்களுக்கு பதிவுகள் எழுதவும் அழைக்கவும் முடியாது., முடிந்தவரை எமது முகநூலை படித்து தகவல் தெரிந்து செயற்படுங்கள்..,

முதல் பாடநெறி முடிந்து விட்டது நாம் எப்படி இதில் இணைவது என்ற தயக்கம் வேண்டாம் நீங்கள் தாறாலமாக இணையலாம், உங்களுக்கு தனியாக நேரம் ஒதுக்கப்பட்டு கற்றல் ஆரம்பமாகும்.

எமது வேலைப்பழுவுக்கு இடையில் நாம் மாணவர்களுக்கான கற்பித்தலையும் தயார் செய்ய வேண்டிய நிலையில் இருப்பதால் சில சமயங்களில் பதிவுகள் தாமதமாகலாம்.

வாசி யோகம் என்ற பேரில் மூச்சை அடக்கி பயிற்சி செய்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பது தற்போது மாணவர்களுக்கு தெளிவாக தெரியும், சித்தர்கள் மருத்துவத்தையும் தந்திருக்கிறார்கள், யோகத்தையும் தந்திருக்கிறார்கள் இரண்டிலும் இருக்கும் உண்மையை தெளிவாக கற்றால் மட்டுமே உண்மை புலப்படும் என்பது முதல் கட்ட வகுப்புக்கள் மூலம் தெளிவாக புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.,.

மாணவ மணிகளே.. உங்கள் சிந்தனையில் அறிவின் தெளிவை தயக்கமின்றி பதியுங்கள் இங்கு.., இந்த பாடநெறி உங்களுக்கு எப்படியாக அறிவு மாற்றத்தை தந்திருக்கிறது மற்றும் உங்கள் நிலை எப்படி இருக்கிறது என்று எழுதுங்கள் உங்கள் நண்பர்கள் உங்களை பார்த்து தெளிவடையட்டும்.

” கண்ணில் வியாதி யுரோகந் தனஞ்செயன்
கண்ணிலிவ் வாணிகள் காச மவனல்லன்
கண்ணினிற் கூர்மன் கலந்தில நாதலாற்
கண்ணினிற் சோதி கலந்ததும் இல்லையே..”

” அழிகின்ற ஓர் உடம்பு ஆகும் செவிகள்
கழிகின்ற காலவ் விரதங்கள் தானம்
மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடி
ஒழிகின்ற ஊனுக்கு உறுதுணை இல்லையே...”

எமது மாணவர்கள் சிலரின் செயற்திட்டம் இங்கு காணலாம்..




















சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Thursday, April 16, 2015

உடல் கொழுப்பு பயம் இல்லை..

வணக்கம் தோழர்களே..,

எமது ஆய்வில் நீண்ட நாளாக இருந்த விடயம் ஒன்று இன்று காலையில் முடிவுக்கு வந்திருக்கிறது., உடல் கொழுப்பை குறைத்து தொந்தியை சுருக்கி ஆரோக்கியமான உடல் நிலைக்கு வழி செய்யக் கூடிய நிலையில் இதை நீண்ட நாள் ஆய்வில் தயார் செய்திருக்கிறேன். உடல் செமிபாட்டுத் தொகுதியை சீர் செய்து உடலில் ஏற்படும் தேவையற்ற கொழுப்பை கட்டுப்படுத்தி சுவாசத்தையும் சீர் செய்க்கூடிய வகையில் இந்த கடுமையான நாத நீர் (திராவகமாக) தயாரிக்கப்பட்டிருக்கிறது.


இதை சுத்தி செய்த நீருடன் 50 மி.லீ.. நீரில் 3 துளி என்ற அளவில் சேர்த்து தினம் இரண்டு வேலை சாப்பிட்டால் சுமார் 15 நாளில் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை உங்களால் உணரமுடியும். கடுமையாக உடல் எடை இருப்பவர்கள் இதை உணர சற்று காலதாமதமாகும், அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப இதன் வேகத்தை அதிகரித்து கொடுத்தால் விரைவாக உடல் மாற்றம் பார்க்கலாம்.

உடல் பருமனுக்கான மருந்து இது அல்ல என்பதை ஞாபகத்தில் வையுங்கள், இது உடல் கொழுப்பை கட்டுப்படுத்த பயன்படுவது, உடல் பருமனுக்கு கொழுப்பு மட்டும் காரணம் அல்ல. இதனுடன் சில இன்னும் சில ஆய்வுகள் விரைவில் ஆரம்பிக்க இருக்கிறேன், அது பெண்களுக்கு ஏற்படும் தொந்தியை கரைக்க (குழந்தை பெற்ற) உதவியாக இருக்கும்.

http://siththarvaakadam.org/?p=821


சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Monday, April 13, 2015

மகாலட்சுமி இயந்திரமும் அதன் பூசை முறையும்...

வணக்கம் மாணவர்களே /  தோழர்களே..

நீண்ட நாட்களாக எந்த மந்திரப்பதிவும் வரவில்லை என்ற ஏக்கம் எமது மந்திரங்களை எதிர்பார்கும் வாசகர்களுக்கு இருக்கிறது.. அதன் வெளிப்பாடாக நாம் ஓர் செயற்பாட்டை ஆரம்பிக்கலாம் என இருக்கிறோம்..

அதாவது சாத்வீக தன்மை கொண்ட இயந்திர மந்திர உபாசனைகள் செய்து தரலாம் என நினைக்கிறேன்.. உதாரணமாக கூறினால் உங்கள் வீடுகளில் தொழில் சாலைகளில், வியாபார தளங்களில் இருக்கும் குறிப்பிட்ட பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய சில வழிபாடுகள்..



1. மகாலட்சுமி இயந்திரமும் அதன் பூசை முறையும்
வீடுகளில் பெண்களால் செய்யப்பட வேண்டிய பூசை முறை.

2. சுப்ரமணியர் மாத்ருக இயந்திரம்
தொழில் நிலையத்தில் ஏற்படும் தடைகள் நீங்க செய்யவேண்டியவை.

3. பால சண்முக மகா இயந்திரம்
குழந்தை பாக்கியம் என்ற சொல்லுக்கு இதுவே ஆதாரமக கூறப்படுகிறது. பெண்களால் செய்யும் வீட்டு வழிபாடு.

4. ஸ்ரீ சுப்ரமணியர் மகா இயந்திரம்
முருகப்பெருமானின் அருளை பெற்று ஞான மேட்சத்தை அடைய இது., ஆண் பெண் என எவரும் இதை பூஜிக்கலாம். அவ்வையார் இந்த பூசை செய்ததாக எமது குரு வம்சத்தினர் கூறுவதுண்டு.

5. பிரம்ம இயந்திரம்..
கன்ம வினையால் நாம் இங்கு பிறந்திருக்கிறோம், அதில் இருந்து விடுபட்டு மேலும் இப்பிறவியில் நாம் செய்த வினைகளை நீங்கி இனியும் பிறப்பு வேண்டாம் என்று வழிபடும் பூசை முறை..

6. ஸ்ரீ விஷ்னு மகா லட்சுமி இயந்திரம்
இது ஆண்களால் தொழில் சாலைகள் வியாபார இடங்களில் கண்டிப்பாக செய்ய வேண்டிய வழிபாடு..

7. மகிடாசூர மர்த்தனி இயந்திரம்
தொடர்சியான எதிரிகள் தொல்லையில் இருந்து வெளிவர, வேலை செய்யும் இடத்தில் மேல் அதிகாரிகள் மூலம் ஏற்படும் மனகசப்புக்கள் விலக இதை ஆண்கள் பெண்கள் என யாரும் செய்யமுடியும்.

8. நந்திகேஸ்வரர் மகா இயந்திரம்
இது ஓர் அற்புதமான இயந்திரம் சிவபூசைகள் செய்து வழிபடுபவர்கள் இந்த இயந்திரத்தை பூசித்தால் சிவனை மிக இலகுவாக நெருங்க முடியும். இவர் ஞான நெறியை பேதிப்பவர்.

9. கணேசர் ஸ்ரீ லட்சுமி மகா இயந்திரம்
இதுவும் வீடுகளில் செய்ய வேண்டிய பூசைமுறைகளில் ஒன்று. வீட்டு வாசல் படியில் இருந்து வீட்டை உள் நோக்கி இந்த இயந்திரத்தை வைக்க வேண்டும். இதன்மூலம் இரணிய காலத்தில் (மாலை 5.30 - 6.30) வரையில் மகாலட்சுமி இந்த இயந்திரம் இருக்கும் வாசல்களில் வந்து ஆசி செய்வால் என்பது இரணிய சகதம் எனற வடநூலில் கூறப்படுகிறதாக கூற கேள்விப்பட்டிருக்கிறேன்..

10. ஸ்ரீ வக்ரதுண்டர் மகா இயந்திரம்
இது மிக அற்புதமான இயந்திர மந்திர பூசை, வீட்டில் குடும்பங்களில் உறவுகளில் ஏற்படும் மனக்கசப்புக்களை நீக்கி, இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய மிக சிறந்த வழிபாடாக அமையும்.

இங்கு நாம் பதிவிட்டிருப்பவை வேத ஆகம உபநிடதங்கள் சாந்த அடிப்படியில் உருவாக்கப்பட்ட இயந்திர மந்திர பூசை முறைகள்.., இவை நீண்ட காலமாக நாம் உபயோகிக்கிறோம், எமக்கு அல்ல பிரச்சனை என்று வருபவர்களுக்கு.. நல்ல பலனும் கிடைக்கிறது..
விஷேடமாக ஹோமம் செய்து அதில் இந்த இயந்திரங்களை ஆவாகணம் செய்து வேண்டுமானாலும் தரமுடியும்.

குறித்த நபரின் புகைப்படத்துடன் எம்மை தொடர்பு கொண்டால் உங்கள் தேவைக்கு ஏற்ற இயந்திரமும் அதன் பூஜை முறையும் செய்து தரப்படும். இதனுடன் சகல காரிய சித்தி தரும் திலர்த்தம் சேர்த்து வேண்டுமானால் நிங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

நாம் வெளிப்படையாக இந்த முறைகளை பதிவிடலாம் என நினைத்தோம் ஆனால் எமது பிலாக்கில் இருந்த மந்திரங்கள் விற்பனையானதை அவதானித்தபின்னர் இதை பதிவிடக்கூடாது என்ற திடமான முடிவுக்கு வந்துவிட்டோம்.

உங்களுக்கு இங்கு காட்டப்படும் விடயங்கள் தெரிந்திருக்கும், மருந்துகளானாலும் சரி இரசவாதம் ஆனாலும் சரி மந்திரமானாலும் சரி, அவற்றை ஆதாரங்களுடன் பதிவதே எமது பனியாக இருக்கும்.
நம்பிக்கை இருப்பவர்கள், தேவை இருப்பவர்கள், எமது மின்னஞ்சல் முகவரிக்கு தெளிவாக எழுதி அனுப்புங்கள்..

muthaly@gmail.com அல்லது  siththarvaakadam@gmail.com
என்ற இரண்டு மின்னஞ்சலுக்கும் உங்கள் தகவல் அனுப்பலாம்.
எமது இணையம் siththarvaakadam.org

உலகில் எந்த பகுதியில் இருந்தாலும் அது உங்களை வந்தடையும். இருக்கும் இடத்துக்கு ஏற்ப அதன் கட்டணம் அமையும்.

நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Sunday, April 5, 2015

சித்த மருத்துவ வகுப்புக்கள் ஆரம்பம்,

வணக்கம் மாணவர்களே,

நேற்றய வகுப்பு இனிதே நாடிகள் பற்றிய விளக்கத்துடன் நடைபெற்றது., இணையத்தில் சில கோளாறுகள் காரணமாக தடைகள் இருப்பினும் கற்றல் சிறப்பாக நடைபெறுகிறது என நான் நினைக்கிறேன். உங்கள் கருத்து என்ன..!

அப்படியே நாம் கூறிய கல், இதுவே.., தவறாமல் மாணவர்கள் அணைவரும் இதைப் போன்று ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள்.,



மேலும் சிலர் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை., இதற்கு மேல் எம்மால் இதைப்பற்றி கருத்துக்கள் விளக்கங்கள் தரமுடியாது.




புதிய மாணவர்கள் சேர விரும்பினால்.. muthaly@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலா.

தேவையிருப்பின் நீங்கள் மின்னஞ்சல் செய்து எம்மை தொடர்புகொள்ளுங்கள்..

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Thursday, December 11, 2014

வணக்கம் தோழர்களே,


எமது குருகுல வேலைகள் ஆரம்பம், மழையில் இடை நிறுத்தம்.

http://siththarvaakadam.org/?p=622

Wednesday, November 5, 2014

அணைவருக்கும் வணக்கம்,

வணக்கம் தோழர்களே,

நீண்ட நாளாக எந்த பதிவும் வரவில்லை என்று நினைக்க வேண்டாம். எமது புதிய தளத்தில் அணைத்தும் கிடைக்கும்.. சித்தர்கள் தொடர்பானவை..

http://siththarvaakadam.org/

நன்றி..

Saturday, October 4, 2014

விடம் தீண்டினால்

வணக்கம் தோழர்களே,

விடம் தீண்டியவர்களுக்கு முதலுதவி செய்ய வேண்டும் என்று கேட்ட தோழர்களுக்கு இந்த மந்திரப்பதிவு.

மந்திரத்தை முறைப்படி சித்தி செய்து வைத்திருந்தால் யாருக்கு விடம் தீண்டினாலும் உபயோகிக்களாம். அது போல் மந்திரம் சித்தியானவருக்கு விட பூச்சிகள் குறிப்பாக பாம்பு தீண்டாது..

சித்தி செய்வது அமாவாசை இரவு நல்லிரவில் 108 முறை தனிமையான இடத்தில் இருந்து உருச்செய்ய வேண்டும்..

சித்தியானால் அதில் இருந்து மூன்று நாட்களுல் உங்கள் உறவுகள்








அல்லது நண்பர் யாருக்காவது பாம்பு தீண்டும்,,..

பயந்தால் மந்திரம் செய்யும் என்னத்தை விட்டுவிடுங்கள்..

நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Friday, October 3, 2014

இரசவாதம்.. கல்லுப்பு

வணக்கம் தோழர்களே,

எமது பயனத்தின் போது கல்லுப்பு பற்றிய ஓர் தேடலுக்காக இந்து சமுத்திரத்தின் ஓர் பகுதியின் நிலப்பரப்புக்கு சென்றிருந்தோம்.

அருமையான கடல், அமைதியாக இருந்தது, குறித்த நிலப்பரப்பில் இருந்து கிடைக்கும் புதையல்கள் அளவு கடந்து கிடப்பது தெரிந்தது..

மிக அருமையான மருத்துவப் பொருட்கள் குமிந்து கிடக்கும் ஓர் இடம் அது.. ஆனால் அந்த பிரதேசத்தை ஒட்டிய எந்த மருத்துவருக்கும் இது தொடர்பான எந்த ஆற்றலும் அறிவும் இல்லை..., அவர்களை பொருத்தவரை அங்கு இருப்பது கட்கள் அவ்வளவு தான்..

ஆனால் எமது கண்ணுக்கு தெரிந்தவை புதையல்கள்.., அதில் நாம் சிறப்பான பல விடயங்களை படமாக்கினோம்.. அவை ஒவ்வொன்றாக பதிவாகும் இங்கு..

அதில் ஒன்று இங்கு காட்டப்படுகிறது..

“ வாதியா மென்றுசொல்லி கல்லுப்பைதான்
வடிவாக விட்டுமே மூலிதேடி
சேதியாய் கேட்டுமே வாதம்சுட்டு
சிறப்பித்து திரிவார்கள் உலகவாதி”

“ ஆகுமே கல்லுப்பு திராவகத்தால்
வடைவான வேதையிது அடுத்துப்பாரு
ஏருமே சரக்கெல்லாம் கட்டிப்போகும்
மெளிதான லோகமெல்லாம் தானேநீரும்”

“ கொள்ளவே கல்லுப்பு பலமோபத்து
கூறான வீரமது பலமோபத்து
கொள்ளவே இதுவிரண்டும் கல்வத்திட்டு
விருப்பமாம் சாமமிரண்டு அரைத்துக்கொள்ளு”

இப்படி பல அற்புதங்களை செய்யக்கூடிய கல்லுப்பு இதுவாகும்..

சுக்காண் கல்லு இது இல்லை என்பதை மிக தெளிவாக அவதானிக்க வேண்டும்... இது கடலின் நுறையால் உப்பாக மாற்றப்படும் கல்.

கடுமையானதாக இருக்கும், நிலத்தில் பூனீரு பூப்பது போல் இது கல்லில் கடலின் நுறையால் பூக்கும், ஆனால் கடல்நுறையும் இல்லை.. இதன் மோல் எந்தக்காலத்திலும் கடல்பாசி படியாது.. அதை தவிர்த்து மற்ற இடங்களில் படியும்..

இதை முறையாக சுத்தி செய்தால் இதையும் அறு சுவைக்கு பயன்படுத்த முடியும்,

கல்லுப்பு என்றால் சமையலுக்கு பயன்படும் உப்பை எடுப்பது இல்லை, கல்லுப்பு நீருக்கு கரையாத உப்பு என்பதை தெளிவாக படிக்க வேண்டும்..

சமையல் உப்பிலும் இதன் தன்மை கிடைக்கும் ஆனால் மிக குறைவாக இருக்கும், அதாவது 100க்கு 10 வீதம் என்று..

படங்களை பார்த்தால் தெரியும்..
























நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Thursday, October 2, 2014

சரசுவதி மகா மந்திரம் - இருள் நீங்கட்டும்..

வணக்கம் தோழர்களே/ மாணவர்களே,

இன்று விசயதசமி என்று மிக கடுமையான பூசைகளில் இருக்கும் அன்பர்களுக்கு ஓர் மந்திரப்பதிவு..

இது ஓர் அற்புதமான மகா சரசுவதி மந்திரம்.., இன்றில் இருந்து ஆரம்பிக்களாம், கல்வியில் மேம்மையடைய நினைக்கும் ஆண், பெண் இருவரும் உபாசணை செய்யலாம். பல அறிய இரகசியங்கள் படிக்கும் போது நமக்கு தெளிவடைய இம் மந்திரம் மிக உதவியாக இருக்கும்..

சுமார் 15 ஆண்டுகள் நாம் இதை உபாசணை செய்து, இதன் உண்மையான சக்தியை தெரிந்துகொண்டோம்..

இது குருமூலமாக கிடைக்கவேண்டியது என்பதால் எமது குருமாரின் ஆசிகள் உங்களுக்கு கிடைக்கட்டும்...

சரசுவதி மகா மந்திரம்

ஓம் மகா சரசுவதி, ஓம் வாடி ஈசுவரியே பரமசக்தியே வா வா, ஓம் நம சக்தி வா, ஓம் கணபதியே வா, ஓம் மந்திர சங்ஙாரியே வா, ஓம் பூவும் வா, திருவும் வா, ஐயும் வா, சவ்வும் வா, கிலியும் வா, புவணாபதியும், புவணேசுவரியும் என் நாவிலும் சிந்தையிலும் முன் நிற்கவே சுவாகா...


இயந்திரம்...

உபாசணை செய்ய ஆரம்பிக்கும் காலத்தில் இதன் இயந்திர பூசைகள் தேவையில்லை என்பதால் அதை பின்னர் தேவைப்படுபவருக்கு ஏற்ப கிடைக்கும்..

கிரிகை.

இன்றில் இருந்து தினமும் மாலையில் இதை வடக்கு முகமாக இருந்து எதிரே கலைவாணி இருப்பதாக உவமைப்படுத்தி குரு வணக்கம் செய்து பின் இந்த மகா மந்திரத்தை 64 முறை உபாசணை செய்து விபூதி பூசவும்..
இது விளையாட்டு அல்ல.. யாரிடம் விளையாடினாலும் கலைவாணியிடம் மிக அவதானமாக இருக்க வேண்டும்...

நாவில் இருப்பவள் என்பதால் சற்று காராசாரமான வார்த்தைகள் வர தொடங்கும் ஆனால் அது உங்களை சோதிப்பதற்கு என்று நினைவில் இருந்துங்கள்..

வரம் கிடைக்க முன், அதற்கான தகுதியானவரா என்ற சோதனை எப்போதும் உண்டு..

பாரம்பரிய மந்திரங்கள் பதிவிடுவதில்லை என்று இருந்தேன், இருப்பினும் இன்று இருள் நீங்கிய முழு நாள் என்பதால் உங்களில் சிலரின் இருளாவது விலகட்டும் என்று பதிவிடுகிறேன்..

இதையும் அப்படியே பிரதி செய்து உங்கள் இணையத்தில் போட்டு பணம் சம்பாதிக்க வேண்டாம்.. உங்கள் பதிவாகவும் போட்டு சரசுவதியின் விளையாட்டில் சிக்கிக் கொள்ளவேண்டாம்..



















நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

மூலிகை ஆய்வு...

வணக்கம் தோழர்களே,


எமது பயனத்தின் போது செயற்திட்ட இடத்தில் இருந்து சுமார் 24 கி மீ. தூரத்தில் இருக்கும் ஓர் பெரிய காடு சென்று சில மூலிகைகள் ஆய்வுகள் மேற்கொண்டோம்... அப்போது நாம் கண்ட சில மூலிகைகள் உங்களுக்கு தொடர்சியாக பதிவிடுகிறேன்..


அத்துடன் பல மாதங்களாக தேடிய ஓர் அற்புத மூலிகையும் கிட்டியது.. அது தொடர்பான விளக்கம் பின்னர் தருகிறேன்..


















நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Wednesday, October 1, 2014

செயற்திட்டம் ஆரம்பம்....

வணக்கம் தோழர்களே/ மாணவர்களே...
செயற்திட்ட வேலைகளை ஆரம்பித்து விட்டு வீடு திரும்பியிருக்கிறேன்...
இன்னும் ஓர் வாரத்தில் நிலப்பரப்புக்கள் சுத்தம் செய்ய வேலையாட்களை நியமித்திருக்கிறேன்.. அதை எமது மாணவர் ஒருவர் அங்கிருந்து மேற்பார்வை செய்வார்.. அதன் பின் எமது கட்டிட வேலைகல் தொடங்க வேண்டும்.. எப்படியாவது இந்த மாத இருதிக்குள் கட்டிட வேலைகள் முடித்து அங்கு செல்லவேண்டும் என்ற நோக்குடன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது..
கடந்த வருடம் இதை ஆரம்பிக்கலாம் என தொடங்கிய போது நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டதால் அப்படியே நிறுத்திவைத்திருந்தேன்.. ஆனால் இம்முறை எது எப்படி இருந்தாலும் இதை செய்வது என்ற முடிவுக்கு வந்தாயிற்று..
உங்களில் பலரின் ஒத்துலைப்பு கிடைக்கும் என நினைத்தேன் ஆனால் மிக மிக சிலர் மட்டுமே இதுவரை உதவியிருக்கிறீர்கள்.. பலரும் குடும்ப்பப் பிரச்சினை மற்றும் தொழில் பிரச்சினை என்று காரணம் காட்டியிருக்கிறீர்கள்.. பரவயில்லை... ”வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும், ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்” என்றது போல் நடப்பது நன்மைக்கே என்று செயற்படவேண்டியது தான்..
எமது வாசகர் ஒருவர் எமது செயற்திட்டத்துக்கான இணையத்தை தயார்செய்து வருகிறார்.. விரைவில் தளம் ஆரம்பித்த பின்னர் மாணவர்கள் மற்றும் வாசகரள் என அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்..












எமது சேவை தனிப்பயன் உடையது அல்ல, இது உங்கள் சேவை உங்கள் செயற்திட்டம்.. அதின் வெற்றி உங்கள் முயற்சியில் தான் இருக்கிறது..
விரும்பிய போது நேரில் வந்து கற்கும் வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்படிகிறது.. உங்கள் முயற்சி உங்கள் வெற்றி..
தற்போது ஒரு ஏக்கர் நிலத்தில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படிகிறது.. இதன் செலவுகள் எப்படி இருக்கும் என உங்களுக்கும் தெரியும் என நினைக்கிறேன்,, முடிந்தவரை சிறப்பாக செய்ய முயற்சி செய்கிறேன்.. உங்கள் உதவியுடன்..
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Saturday, September 27, 2014

இடகலை, பிங்கலை, சுழினை

வணக்கம் மாணவர்களே... மணிகளே, சுடர்களே, எனதன்பின் முட்டாப்பசங்களே...

இதுவும் அது..அதுவும் இது...

“ இடகலைபிங் கலைசுழினை மூன்றுமொன்று
இகத்தினிலே பலர்கள்வெவ் வேறாய்ச்சொல்வர்
இடகலைபிங் கலைசுழினை யெதுவென்றாக்கால்
இன்பமுருஞ் சோடசத்தின் பொருளதாகும்
இடகலைபிங் கலைசுழினை அரியனோமீசன்
இதையுணரா தேங்கினார்கள் மாந்தர்தானும்
இடகலைபிங் கலைசுழினை யுச்சிநடுவாதி
இக்கலையை யறிந்துணர்ந்தவ் விடத்தில்நில்லே..””

“ நில்லென்று சொன்னதொரு ஆசான்வாக்கை
நிலைதவற விட்டாலே பலிதமாகா
அல்லவிதன் விபரமதை தெரியக்கேளு
அண்ணாக்கை யுண்ணாக்கி லயிக்கம்பண்ணி
நல்லாய ரவிமதிபூ ரணங்கண்மூக்கு
நானிலத்தில் வாய்செவியும் பரிசம்மெட்டும்
சொல்லாதே நடுவணையென் றிதற்குநாமஞ்
சொல்லிடுவார் கயிலாசஞ் சொர்க்கமென்றே..”

இதைவிடவும் ஓர் இலகுவான விளக்கம் உங்களுக்கு வாசி பற்றி பிராணாயாமம் பற்றி மூச்சுப் பயிற்சி பற்றி கூறமுடியாது..
பாடல் விளக்கம் குறிப்பாக..

இடகலை பிங்கலை சுழிமுனை என்ற மூன்றும் ஒன்று இது இன்பத்துடன் இருப்பதற்குறிய பொருள்.. இதுவே ஈசனாகவும் இருக்கிறது.. இது தெரியாமல் முட்டாள் பயலுகள் திரிறாங்கலாம்..இடது வலது நடு என்பது உச்சி நடு அடி என இருக்கிறது... இதை உணர்ந்து நில்..
இப்படி உண்மைய ஆராய சொன்ன குருவின் சொல்லை மதியாமல் திரிபனுக்கு இது பலியாது,,.. இதன் விபரம் என்னவென்றால் உள்ளிருப்பதையும் வெளியிருப்பதையும் ஒன்றாக கூட்டி உடலின் பரிசங்கள் எட்டுக்கும் இது தான் நடுவாகும்.. இதைத் தான் கயிலாயம் என்றும் சொர்க்அமென்றும் சான்றோர் கூறுவர்..
இப்படி கூறும் சித்தர்கள் எப்படி உங்களை மூக்கை பொத்திக் கொண்டு காற்றை இழுக்கவும் விடவும் சொல்லியிருப்பார்கள்.. அப்படி அவர்கள் சொல்லியிருந்தால் அதில் எத்தனை வீதம் பரிபாசை கலந்திருக்கும்..

“ என்றேபற் பலவாக யியம்புவார்கள்
இந்திரபுரி வைகுண்ட கயிலாசந்தான்
நன்றேகன் யாகுமரி காசிசேது
நலமான மேகமொடு நாதமென்றும்
வல்லதொரு காற்றுடனே சூட்சமென்றும்
மன்றாகு மவுனமுடன் ஆதியென்றும்
குன்றான ஆதிநடு முடிவீதென்றும்
குணமுடைய வஸ்துபதி யிதுயென்பாரே..”

இந்திர லோகம், வைகுண்டம், கயிலாசம், கன்யாகுமரி, காசி, சேது, மேகம், நாதம், காற்றின் சூட்சம், மவுனம், ஆதி, குன்று இப்படி எல்லாப் பெயராலும் அழைக்கப்பட்டது ஒன்றே...

ஏகாதசியில் செத்தவன் வைகுண்டம் போவான் என்று சொன்ன பழந்தமிழனின் வாக்கு இன்று பஞ்சாங்கத்தில் முடங்கிப் போனது..
கயிலாசத்துக்கு (இமயத்துக்கு) போனால் இன்று நமது மக்கள் மட்டும் ரிசிகளாகவும், சித்த்ர்களாகவும், யோகியாகவும், சாமியாராகவும் மாறுகிறார்கள்.. ஆனால் சுற்றுலாக்கு வரும் எந்த வெள்ளையனின் கண்ணுக்கும் தெரியாத காட்சி நமது மக்களுக்கு மட்டும் தெரிகிறது.. கேட்டால் நம்பிக்கை இல்லாதவனுக்கு கடவுள் காட்சி தரமாட்டார் என்பது...! ஏண்டாப்பா.. நம்பிக்கை இல்லாதனை நம்பவைப்பது தானே இறைவனின் ஆற்றலாக இருக்க வேண்டும்... கேட்டால் நம்பினார் கெடுவதில்லை என்பார்கள்... நாங்கு மறை தீர்ப்பு என்பார்கள்...நம்பாதவர்கள் யாரும் இங்கு வாழ்வதில்லையா.. உங்கள் பரமனை நம்பாத நாடுகள் உங்கள் நாட்டைவிட சிறந்த நாடுகளாகவும் செழிப்பாகவும் இருக்கிறதே.. இப்படிக் கேட்டால் விதண்டாவாதம் என்பார்கள்.. எதற்கும் அடியும் முடியும் தெரியாதவர்கள் கூறும் நொண்டிச் சாட்டுக்கு விதண்டாவாதம் என்று பெயர்..

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்றார்கள்.. இன்று குமரன் என்ற பெயரில் கோவில்கள் மட்டும் இருக்கிறது,.. குமரன் எவனையும் கானவில்லை..

இப்படி பல பல இரகசியங்கள் புதைந்த தமிழை பணத்துக்காக அடகு வைக்கும் ஆசாமிகளை என்ன சொல்வது..
கடவுள் என்பது வேறு, கடவுள் நம்பிக்கை என்பது வேறு.. இதை சரியாக புரிந்தால் நீங்கள் யாரும் சாமியார்களிடம் போகப்போவதில்லை.. மந்திரவாதிகளை தேடப்போவதில்லை..

கடவுள் அனைவருக்கும் பொதுவானவர் என்றால்.. நீ விரும்பினாலும் சரி இல்லாவிட்டாலும் சரி... அவரின் அன்பு எப்போதும் இருக்கும்.. அதை பணத்தை கொடுத்து வாங்க நினைப்பது அவரை நீ உதாசினம் செய்ய முடிவாகியது என்று அர்த்தம்..
அருச்சணை போட்டால் கஷ்டம் தீரும் என்றால்.. அருச்சனை போடாதவன் கஷ்டத்தை அவர் தீர்க்கமாட்டாரா... அப்படியானால் அவரை தாயுமானவர் என்றும், அன்பின் சொரூபம் என்றும், அன்பே சிவன் என்றும் ஏன் கூறுகிறீர்கள்..

அவருக்கு நீங்கள் அன்பு செலுத்த விரும்பினால் அதை நீங்கள் உங்கள்

கடமைகள் மூலம் சரியாக செய்யுங்கள்..
“ வையப்பா உபதேசம் யாராருக்கென்றால்
மைந்தனே யெச்சாதி யானாலென்ன
மெய்யப்பா தவறாத சீடன்வேனும்
மேன்மையுள்ள புத்தியதா யிருக்கவேணும்””

எமக்கு குரு வம்சத்தின் மூலம் கிடைத்த உண்மைகளை எமக்கு பின்னர் யார் எடுத்துச் செல்வார்கள் என்று தேடுகிறோம்... இதுவரை எவரையும் சந்திக்கவில்லை..

ஒன்று மந்திரம் கற்க வருகிறார்கள்.. கேட்டால் சமூக சேவை செய்ய என்பார்கள், அல்லது தங்கள் பிரச்சினைகளை தீர்க்க மந்திரம் தாருங்கள் என்பார்கள்... இப்படியே செல்கிறது பயனம்...

இன்றைய காலகட்டத்தில் அதை தவறாகவும் கூற இயலாது.. சிந்தனைகள் கடமைகள் என அளவு கடந்து தேவைகளை ஏற்படுத்திய சமூகத்தில் தேவைகள் அற்று உண்மையை தேட எத்தனை போர் வரப்போகிறார்கள்..

அனைத்தையும் தாண்டிய அம்சம் ஒன்று உண்டு என்பது பழந்தமிழன் வாக்கு.. அதற்கமைய காலத்தின் கட்டளையை காத்து எமது பயனம் தொடரும்..

இங்கு நீங்கள் யாரும் நல்ல மாணவர்கள் அல்ல என்ற அர்த்தம் அல்ல.. உங்கள் நிலை உண்மையை கற்பதை விட வாழ்க்கையை வெற்றியடையச் செய்வது என்ற பயனத்தில் இருப்பதால்... அந்த மாயையில் இருந்து வெளிவர நீண்ட நாட்கள் எடுக்கும்...

வாழ்வாவது மாயம், மண்ணாவது திண்ணம்..

நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்